Friday, October 29, 2010

கனத்த கார்மேகமே !

காத்திருந்து காத்திருந்து
கனத்துப் போய்
கட்டுக்கடங்காமல் அலைமோதும்
காதலியே (கார்மேகமே)!

வாடி நிற்கும்
காதல் முகம் பாராயோ !
வந்து மடி சேராயோ !

கனத்த காதல் மனதை,
மெல்லிய என் - சுவாச
காற்று கொண்டு கலைக்கவா ?

கடல் இறங்கி மண் தொட்டது போல் ,
காட்றாறாய் , புயல் காற்றாய்
கட்டுக்கடங்காமல்,
கலந்து கிடப்போம் வா!!!

No comments:

Post a Comment