Monday, May 31, 2010

கங்காருவை பார்க்கும்போதேல்லாம்
கடவுளை சாடுகிறது என் தாய் உள்ளம் !

சில காலம் கருப்பை சுகம்
பல காலம் வெளிபை சுகம்
என்ற வசதி அதற்குமட்டும் அருளிவிட்டார் :(
ஒற்றை புள்ளி வைத்தேன் முடிபதற்கு.
இரண்டு மடங்கு
ஆதரிப்பதாக இரண்டு புள்ளி வைத்தாய் நீ ..
இன்று முடிவில்லா தொடர்கதையாய் நாம்
...
தேடல் தேடல் தேடல் ....
எதைத்தான் தேடுகிறேன் ?
எதை தேடுவது என்பதைத்தான் !!

Thursday, May 27, 2010




நீ காதலனாக கசிந்துருகிய தருணத்திலும்
கணவனாக கைபிடித்த தருணத்திலும்
வராத மரியாதை ( மயக்கம் ) - இன்று
என் மகளை நீ மார்பில் தூங்க வைப்பதை கண்டு!!