Saturday, August 28, 2010

ஒரு யுகம் கடத்தது போல்..

உன்னை தேடும் விழிகள்
உன்னவருடையதாக இருக்கலாம்.
ஆனால் ,
உனக்காக உருக்கி அழும் விழிகள்
என்னுடையது .

காலை தனிமையை
காபி குடித்து
கடந்து செல்ல - உன்
கணவரால் முடியும்.
ஆனால் ,
கதிரவனே!
காலையில் நீ இல்லையேல்,
என் நாளே
விடிவதில்லை!

என் உலகில் ,
நேற்று பார்த்தது
எதுவும் மாறவில்லை !
ஆனால்,
இன்று எதுவும் எனதில்லை :(

பசித்து உண்ணவில்லை!
சிரித்து பேசவில்லை!
விளையாடி தீர்கவில்லை!
விருப்பம் போல் நடக்கவில்லை !
உற்சாகம் எனக்கில்லை!
உன் பெயரை தவிர,
வேறேதுவும் உச்சரிக்கவில்லை !

வெறித்து பார்த்தேன் விட்டத்தை
வெறுத்து பார்த்தேன் இந்த நாளை !

தேடி தீர்த்துவிட்டேன்
தென்படுவாய் என!
தேய்ந்து ஓய்ந்துவிட்டேன்
தேடல் பொய்த்ததென!

ஒரு வயதான என்னை ,
ஒரு நாள் நீ பிரிந்தது எனக்கு
ஒரு யுகம் கடத்தது போல்
இருக்குது அம்மா !

பாவம்ல இந்த குட்டியம்மா :(




No comments:

Post a Comment